- வீடு›
- செய்திகள்›
- டெல்லியில் காற்றின் தர குறியீடு இதை தாண்டும் போது மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடப்படும்
டெல்லியில் காற்றின் தர குறியீடு இதை தாண்டும் போது மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடப்படும்
By: vaithegi Wed, 02 Nov 2022 7:24:47 PM
டெல்லி: டெல்லியில் கடந்த 2 வருடங்களாகவே காற்று மாசுபாடு உச்சத்தில் இருந்து கொண்டு வருகிறது. இதனால் டெல்லி மக்கள் பல வித நோய்களுக்கு ஆளாகின்றனர். இந்த மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதால் பலர் சுவாச கோளாறு பிரச்சனையால் அவதிப்படுவதாக தெரிவிக்கிறது.
மேலும் காற்று மாசுபாட்டால் டெல்லி மருத்துவமனையில் ICU வார்டில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்த காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் கழிவுகளை தீயிட்டு எரிப்பதால் தான் என்கின்றனர்.
இதனை அடுத்து சமீபத்திய ஆய்வறிக்கை தகவலின் படி காற்று மாசுபாடு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவில் டெல்லி காற்று மாசுபாட்டில் முதலிடத்தில் இருந்து கொண்டு வருகிறது.
இதையடுத்து இந்நிலையில் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டெல்லியில் காற்றின் தர குறியீடு 450ஐ தாண்டும் போது மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார். இக்காற்று மாசுபாட்டால் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு கொண்டுஜ் வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு பள்ளிகள் மூடப்படும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த வருடம் காற்று மாசுபாட்டால் பள்ளிகள் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.