Advertisement

இந்தியாவில் நேற்று கொரோனாவால் 1,321 பேர் பாதிப்பு

By: vaithegi Thu, 03 Nov 2022 2:13:14 PM

இந்தியாவில் நேற்று கொரோனாவால் 1,321 பேர் பாதிப்பு

இந்தியா: புதியதாக 1,321 பேர் பாதிப்பு ...... உலக நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த கொரோனா வைரஸ் தற்போது குறைந்து இருந்தாலும், நாடு முழுவதும் கொரோனா இல்லாத சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை. கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளில் பலர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

மேலும் பலர் உயிரிழந்தும் இருக்கின்றனர். இதையடுத்து இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தடுப்பூசி போன்ற நடவடிக்கைகளால் தற்போது, உலகின் பெரும்பாலான நாடுகளில் இதன் தாக்குதல் தடுக்கப்பட்டு விட்டது.

corona,india ,கொரோனா,இந்தியா

ஆனாலும் இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கொரோனாவால் நேற்று புதிதாக 1,321 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மொத்தம் இந்தியாவில் கொரோனாவால் 4,46,57,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அது மட்டுமில்லாமல் இதுவரை மட்டும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,30,461 ஆக உயர்ந்துள்ளது.

இதனை அடுத்து உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இன்னும் கொரோனா இல்லாத சூழ்நிலை உருவாகாமல் இருப்பதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என மாநில அரசுகளால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Tags :
|