- வீடு›
- செய்திகள்›
- இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 1500 மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற்று இருக்கிறது ... மா.சுப்பிரமணியன்
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 1500 மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற்று இருக்கிறது ... மா.சுப்பிரமணியன்
By: vaithegi Sat, 03 Sept 2022 10:42:23 AM
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் தரம் உயர்த்தப்பட்ட ரேடியோ கதிரியக்கவியல் துறை திறப்பு விழாவில் கலந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொண்டார் .இதற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கடந்த ஆண்டு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் வாயிலாக தமிழகத்திற்கு கூடுதலாக 1500 இடங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. ஒரே ஆண்டில் கூடுதலாக இவ்வளவு மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பது மருத்துக் கல்லூரி வரலாற்றில் இதுதான் முதன்முறையாகும்.
இதனை அடுத்து இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 1500 மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற்று இருக்கிறது. நடப்பாண்டில் கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு கொண்டு வருகிறது.
மேலும் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டஙகளில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் வகையில், தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிபேட்டை போன்ற 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைக்க, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளேன் என அவர் தெரிவித்தார்.