Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 76 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 76 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Nagaraj Thu, 27 Aug 2020 08:26:02 AM

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 76 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் முதன்முறையாக நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் வெகுவாக அச்சம் எழுந்துள்ளது.

மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் மருத்துவ அறிக்கையின்படி, நேற்று நாடு முழுவதும் 76 ஆயிரத்து 14 பேருக்கு கொரொனா தொற்று செய்யப்பட்டதில், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்தை கடந்துள்ளது.

corona,infection,76 thousand,fear,maharashtra ,கொரோனா, தொற்று, 76 ஆயிரம், அச்சம், மகாராஷ்டிரா

இதனிடையே, நோய்த்தொற்று பாதிப்பால் நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாக நேற்று மட்டும் மகாராஷ்டிராவில் 295 பேரும், கர்நாடகாவில் 133 பேரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதும் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்தை கடந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags :
|
|