Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் நேற்று மட்டும் 2.67 லட்சம் மாதிரிகள் சோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்

இந்தியாவில் நேற்று மட்டும் 2.67 லட்சம் மாதிரிகள் சோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்

By: Karunakaran Thu, 09 July 2020 1:30:27 PM

இந்தியாவில் நேற்று மட்டும் 2.67 லட்சம் மாதிரிகள் சோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1.21 கோடியை தாண்டியுள்ளது. மேலும் இதுவரை கொரோனா காரணமாக 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்து, கொரோனா நோயாளிகளை விரைவில் கண்டறிய மத்திய அரசு தொடர்ந்து வேகம் காட்டி வருகிறது. சிறப்பு முகாம்கள், நடமாடும் சோதனை வாகனங்கள் மூலமும் பரிசோதனைகளை நடத்தவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பரிசோதிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

indian medical research council,coronavirus,corona test,india ,இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கொரோனா வைரஸ், கொரோனா சோதனை, இந்தியா

கொரோனா பரிசோதனை எண்ணிக்கை நாளும் அதிகரித்து உள்ளதால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் பரிசோதனைக்கூடங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

நாடு முழுவதும் நேற்று வரை மொத்தம் 1,07,40,832 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 2,67,061 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 767296 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21129 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 476378 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :