இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,972 பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Karunakaran Mon, 03 Aug 2020 2:45:50 PM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே உள்ளது.
இருப்பினும் கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்வது சற்று ஆறுதலடைய செய்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்தாலும், கொரோனா பரிசோதனை அதிகரிப்பாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52,972 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 18,03,695 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா காரணமாக 771 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து 11,86 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5.79 லட்சத்துக்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்தியாவில் கொரோனா காரணமாக இதுவரை 38,135 பேர் உயிரிழந்துள்ளனர்.