18 நாட்களில் மட்டும் கொரோனா பலி 2 ஆயிரத்தை கடந்துள்ளது
By: Nagaraj Wed, 19 Aug 2020 10:23:05 AM
தமிழகத்தில் கடந்த 18 நாட்களில் மட்டும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2000-ஐ கடந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 5,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,49,654 ஆக அதிகரித்துள்ளது.
அதில் 121 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,007 ஆக
அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 32 பேரும், அரசு
மருத்துவமனையில் 89 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்த வரிசையில், கொரோனா
மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 108 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,
தமிழகத்தில் கொரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக, தமிழகத்தில் கடந்த 18 நாட்களில் கொரோனாவால் உயிரிழந்தோர்
எண்ணிக்கை 2,072 ஆக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் கடந்த 16 நாட்களாக, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.