கர்நாடகத்தில் ஒரே நாளில் 115 பேர் கொரானாவுக்கு உயிரிழப்பு
By: Karunakaran Sat, 18 July 2020 11:31:54 AM
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அசுரவேகத்தில் பரவி வருகிறது. கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு 51 ஆயிரத்து 422 ஆக இருந்தது. கொரோனா காரணாமாக நேற்று முன்தினம் வரை 1,038 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பரவலால் பெங்களூரு உள்பட 7 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த 3 நாட்களாக கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், பலிஎண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில கொரோனாவுக்கு 115 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 3,693 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 77 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 20 ஆயிரத்து 557 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்புடைய 33 ஆயிரத்து 205 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 115 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியதில், 75 பேர் பெங்களூரை சேர்ந்தவர்கள் ஆவர்.