Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகாவில் ஒரே நாளில் 5,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் ஒரே நாளில் 5,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Nagaraj Sat, 25 July 2020 11:23:23 AM

கர்நாடகாவில் ஒரே நாளில் 5,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஒரே நாளில் 5007 பேருக்கு பாதிப்பு... கர்நாடகாவில் ஒரே நாளில் புதிதாக 5,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 85,870 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் கர்நாடக மாநிலம் முழுவதும் 110 பேர் பலியானதைத் தொடர்ந்து கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,724 ஆக அதிகரித்தது. மாநில அளவில் மொத்தம் 52,791 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் பெங்களூருவில் மட்டும் 30,561 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

karnataka,corona,vulnerability,testing,health ,கர்நாடகா, கொரோனா, பாதிப்பு, பரிசோதனை, சுகாதாரத்துறை

பெங்களூருவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 2,267 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர். அங்கு 41 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. நகரில் இதுவரை 833 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மாநிலம் முழுவதும் 611 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 11 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இவ்வாறு மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Tags :
|