Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொங்கல் பண்டிகையை ஒட்டி, ரயில்களில் இன்று முன்பதிவு தொடங்கியது

பொங்கல் பண்டிகையை ஒட்டி, ரயில்களில் இன்று முன்பதிவு தொடங்கியது

By: vaithegi Thu, 14 Sept 2023 09:28:14 AM

பொங்கல் பண்டிகையை ஒட்டி, ரயில்களில் இன்று முன்பதிவு தொடங்கியது

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ம் தேதி பயணம் மேற்கொள்ள செப்டம்பர் 14-ம் தேதி முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.எனவே அதன்படி பொங்கல் பண்டிக்கைக்காக ஜனவரி 12-ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்வோர் இன்று டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

இதனை அடுத்து வரும் ஜனவரி 13-ம் தேதி பயணத்திற்கு செப்டம்பர் 16-ம் தேதியும் , ஜனவரி 14ஆம் தேதி பயணத்திற்கு செப்டம்பர் 17-ம் தேதியும், ஜனவரி 15-ம் தேதி பயணத்திற்கு செப்டம்பர் 18ஆம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல் ஜனவரி 17ஆம் தேதி பயணம் மேற்கொள்ள செப்டம்பர் 19-ம் தேதி முன்பதிவு செய்ய வேண்டும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

pongal festival,booking,trains ,பொங்கல் பண்டிகை,முன்பதிவு ,ரயில்கள்

பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் முன்கூட்டியே முன் பதிவு செய்து கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க ரயில்வே வாரியம் அறிவுறுத்தி ள்ளது.

விரைவு ரயில்களில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. இதையடுத்து நேற்று டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே மொத்த டிக்கெட்டும் விற்று தீர்ந்தது.

Tags :