Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது

By: Nagaraj Sat, 06 June 2020 7:48:33 PM

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 80,229 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினம் இவ்வாறு கொரோனா பாதிப்பு அதிகரிப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,36,657 ஆக அதிகரித்துள்ளது. 24 மணிநேரத்தில் மட்டும் 9887 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 294 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனாவால் இதுவரை 6642 பேர் உயிரிழந்த நிலையில்,1,15,942 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 80,229 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.

maharashtra,india,corona,impact,increase ,மகாராஷ்டிரா, இந்தியா, கொரோனா, பாதிப்பு, அதிகரிப்பு

இதுவரை 2849 பேர் உயிரிழக்க, 35,156 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 28,694 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 232 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 15,762 பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்லி 3வது இடத்தில் இருக்கிறது. அங்கு 26,334 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 708 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10,315 பேர் குணமடைந்துள்ளனர்.

Tags :
|
|
|