Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,228 ஆக உயர்வு

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,228 ஆக உயர்வு

By: Monisha Sat, 30 May 2020 11:38:55 AM

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,228 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் நாடு முழுவதும் பரிசோதனைகளை அதிகரிக்க, அதிகரிக்க, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது.

இந்தியாவில் இதுவரை 1.73 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,971 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 82,370 ஆக உயர்ந்துள்ளது.

india,coronavirus,maharashtra,impact count,death toll ,இந்தியா,கொரோனா வைரஸ்,மகாராஷ்டிரா,பாதிப்பு எண்ணிக்கை,உயிரிழந்தோர் எண்ணிக்கை

நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று 59 ஆயிரத்து 546 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 62,228 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 682 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் நேற்று மட்டும் 116 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 2098 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 26997 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 33133 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகரிப்பதற்கு மும்பை தாராவி குடிசைப்பகுதியும் ஒரு காரணமாகும்.

Tags :
|