- வீடு›
- செய்திகள்›
- மராட்டியத்தில் பிற்பகல் 12 மணி முதல் 5 மணி வரை திறந்த வெளியில் நிகழ்ச்சி நடத்தக்கூடாது
மராட்டியத்தில் பிற்பகல் 12 மணி முதல் 5 மணி வரை திறந்த வெளியில் நிகழ்ச்சி நடத்தக்கூடாது
By: vaithegi Thu, 20 Apr 2023 09:49:38 AM
மராட்டியம் : மராட்டியத்தில் வெப்ப அலை காரணமாக பிற்பகல் 12 மணி முதல் 5 மணி வரை திறந்த வெளியில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் நவி மும்பையில், சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்ற விழாவில் மிக கடும் வெயில் தாக்கத்தால் சுருண்டு விழுந்து 13 பேர் உயிரிழந்தனர். மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் 24 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
இதனை அடுத்து இந்நிலையில், மராட்டியத்தில் வெப்ப அலை காரணமாக பிற்பகல் 12 மணி முதல் 5 மணி வரை திறந்த வெளியில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்று அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் வானிலையின் தாக்கம் மேம்பட்ட பிறகே, இந்த முடிவிலிருந்து மாற்றம் ஏற்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.