Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நார்வேயில் சக்தி வாய்ந்த நிலச்சரிவால் 8 வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டன

நார்வேயில் சக்தி வாய்ந்த நிலச்சரிவால் 8 வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டன

By: Nagaraj Fri, 05 June 2020 5:51:56 PM

நார்வேயில் சக்தி வாய்ந்த நிலச்சரிவால் 8 வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டன

நிலச்சரிவால் கடலில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன... நார்வேயில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலச்சரிவை தொடர்ந்து 8 வீடுகள் கடலில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நார்வே வடக்கில் அமைந்துள்ள ஆல்டா நகரில் நேற்று (ஜூன் 4) கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு 650 மீட்டர் முதல் 800 மீட்டர் அகலமும், 40 மீட்டர் உயரமும் கொண்டதாக பதிவாகியுள்ளது.

தனது வீட்டில் சாண்ட்விச் தயாரித்து கொண்டிருந்த ஜான் எகில் பக்கெடால் என்பவர் மிகப்பெரிய சத்தம் கேட்டு, வெளியில் வந்து பார்த்துள்ளார்.

landslides,houses,sea,washed,casualties ,நிலச்சரிவு, வீடுகள், கடல், அடித்து செல்லப்பட்டன, உயிரிழப்பு

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றும், நாய் ஒன்றும் நிலச்சரிவில் கடலுக்குள் மூழ்கின. அதிர்ஷ்டவசமாக நாய் கடலில் நீந்தி உயிர் பிழைத்தது. வேறு எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என நார்வே போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து அடுத்தடுத்து லேசான நிலச்சரிவு ஏற்பட்டது. எனவே அருகில் உள்ள வீடுகளில் வசித்த மக்கள், வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

Tags :
|
|
|