Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் நேற்று ஒரே நாளில் 806 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னையில் நேற்று ஒரே நாளில் 806 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Wed, 03 June 2020 11:27:43 AM

சென்னையில் நேற்று ஒரே நாளில் 806 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24,586ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 13,706 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 3 பேர் உயிரிழந்துள்ளதால் பலியானோர் எண்ணிக்கை 200-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 806 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16,585 ஆக அதிகரித்துள்ளது. 8,554 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150-ஆக உள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலவரம் குறித்த விபரம் வருமாறு:-

india,coronavirus,tamil nadu,chennai,impact number ,இந்தியா,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு,சென்னை,பாதிப்பு நிலவரம்

அதிகபட்சமாக ராயபுரத்தில் 3,060 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 1,921 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,711 பேருக்கும், அண்ணாநகரில் 1,411 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 2,007 பேரும், தேனாம்பேட்டையில் 1,871 பேரும், திருவொற்றியூரில் 559 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 910 பேருக்கும், பெருங்குடியில் 278 பேருக்கும், அடையாறில் 943 பேருக்கும், அம்பத்தூரில் 619 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஆலந்தூரில் 243 பேருக்கும், மாதவரத்தில் 400 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 279 பேருக்கும், மணலியில் 228 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Tags :
|