Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்தது

நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்தது

By: vaithegi Tue, 02 May 2023 2:29:59 PM

நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்தது

இந்தியா: கொரோனா தொற்று பாதிப்பு சில வாரங்களுக்கு முன்னதாக 11,000 ஐ தாண்டி பதிவாகி வந்தது. இதனால் மீண்டும் நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வந்தனர்.

ஆனால் ஆரம்ப கட்டத்திலேயே எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளின் காரணமாக தொற்று பாதிப்பு மெல்ல குறைய தொடங்கியது.

இதையடுத்து அதன்படி, நேற்று 4,282 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 3,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

corona,india ,கொரோனா, இந்தியா

மேலும், 17 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,547 லிருந்து 5,31,564-ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 6,379 பேர் ஒரே நாளில் மருத்துவமனையில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 4,43,77,257 ஆக அதிகரித்துள்ளது. இதைத்தவிர நாடு முழுவதும் தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 47,246 லிருந்து 44,175-ஆக குறைவாக பதிவாகி உள்ளது.

Tags :
|