Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 5,387 பேருக்குத் தொற்று உறுதி

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 5,387 பேருக்குத் தொற்று உறுதி

By: Monisha Wed, 10 June 2020 6:04:26 PM

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 5,387 பேருக்குத் தொற்று உறுதி

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 73.12 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

பாகிஸ்தானில் ஒரே நாளில் அதிகபட்சமாக 5,387 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அதிகாரி கூறியதாவது:-

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 5,387 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸால் பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,13,702 அதிகரித்துள்ளது.

china,pakistan,corona virus,prevalence,death toll ,சீனா,பாகிஸ்தான்,கொரோனா வைரஸ்,பாதிப்பு நிலவரம்,பலி எண்ணிக்கை

மேலும் நேற்று 84 பேர் கொரோனாவுக்குப் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 2,255 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 36,308 பேர் குணமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தில் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பஞ்சாப்பில் 43,460 பேரும், சிந்து மாகாணத்தில் 41,303 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்தான் கொரோனா வைரஸ் உச்சத்தை அடையும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
|