அக்டோபர் 25-க்கு பதில் மாற்று வேலை நாள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது
By: vaithegi Tue, 25 Oct 2022 6:23:37 PM
சென்னை : தீபாவளி பண்டிகைக்கு வெளியூர்களுக்கு செல்லும் அனைவரும் பண்டிகை முடிந்த அடுத்த நாள் தான் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு திரும்ப முடியும். இதற்காக அக்டோபர் 25ம் தேதி தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இதனை அடுத்து மக்களின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு அக்டோபர் 25ம் தேதி ஆகிய தீபாவளி மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த நிலையில், கூடுதல் விடுமுறை அளித்துள்ளதால் இதனை ஈடுகட்ட நவம்பர் 19-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என தமிழக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தமிழகத்தை தவிர தெலுங்கானா, ஹரியானா, மேற்கு வங்கம், டெல்லி போன்ற மாநிலங்களில் அக்.25ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 27 ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தனியார், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு ஹரியானா அரசு விடுமுறை அறிவித்துள்ளது.