தமிழகத்தின் சில மாவட்டங்களில் வாட்டி வதைத்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் மழை
By: vaithegi Sun, 23 Apr 2023 3:55:31 PM
சென்னை: மார்ச் மாத தொடக்கம் முதல் தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி, வெயில் கொளுத்தி கொண்டு வருகிறது.
இதையடுத்து தொடர்ந்து ஜூன் மாத இறுதி வரை கோடை வெயில் இருக்கும். அதிக வெப்பம் காரணமாக மக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை கூட தவிர்த்து விட்டனர்.
இதேபோன்று, சிறு குழந்தைகளும் வெயிலில் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் விநோதமாக, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய ஒரு சில மாவட்டங்களில் கடுமையாக வெயில் அடித்து சதத்தை எட்டி வரும் நிலையில், திருப்பத்தூர், வேலூர், சேலம், தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும்
மேலும் தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை போன்ற மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கலவையான வானிலை காரணமாக மக்கள் குழப்பத்தில் இருந்தாலும், வெயிலின் கொடுமை குறைந்தால் போதும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.