Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கையில் இதுவரை 50 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது

இலங்கையில் இதுவரை 50 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது

By: Nagaraj Mon, 25 May 2020 6:32:47 PM

இலங்கையில் இதுவரை 50 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது

இலங்கையில் இதுவரை நடத்தப்பட்ட கொரோனா கண்டறியும் பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை 50,000 ஐ தாண்டியுள்ளது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் கொரோனா பரிசோதனையான பிசிஆர் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 16 ஆயிரத்து 59 சோதனைகள் பொறளையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

inspection,medical road,officers,50 thousand,minister,information ,பரிசோதனை, வைத்திய சாலை, அதிகாரிகள், 50 ஆயிரம், அமைச்சர், தகவல்

6,096 சோதனைகள் ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவ பீடத்தாலும் 5,798 சோதனைகள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் கராபிட்டி போதனா வைத்தியசாலையால் 4,765 சோதனைகளும் கண்டி பொது வைத்தியசாலையில் 3,640 சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் ஒருநாளைக்கு 3,000 பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றாலும், ஒரு நாளைக்கு 6,000 சோதனைகள் வரை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :