Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌ உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌ உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Thu, 29 Sept 2022 4:17:07 PM

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌ உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: ஆந்திர கடலோரப்பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக இன்று (செப்29) தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

இதை அடுத்து வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்‌சி, கிருஷ்ணாகிரி, தர்மபுரி, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌, கடலூர்‌, திருவண்ணாமலை மாவட்டங்களில் மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது

heavy rain,ranipet,tirupattur ,கனமழை , ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌

அதை தொடர்ந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1,2,3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மேலும் இன்று (செப்.29) வட தமிழக மற்றும்‌ ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதை ஓட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌, தென்‌ கிழக்கு மற்றும்‌ அதை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும எனவும் தெரிவித்துள்ளது

Tags :