Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இதுவரை 26 ஆயிரத்து 782 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்!

தமிழகத்தில் இதுவரை 26 ஆயிரத்து 782 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்!

By: Monisha Wed, 17 June 2020 12:17:37 PM

தமிழகத்தில் இதுவரை 26 ஆயிரத்து 782 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் அடங்குவர்.

கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 20 ஆயிரத்து 706 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 528 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், மருத்துவத்துறையினரின் சேவையால் நேற்று ஒரே நாளில் 1,438 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது.

india,coronavirus,tamil nadu,discharge,madras ,இந்தியா,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு,டிஸ்சார்ஜ்,சென்னை

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ள முதல் 10 மாவட்டங்களின் விபரம் வருமாறு:-
சென்னை - 18,565
செங்கல்பட்டு - 1,501
திருவள்ளூர் - 914
திருவண்ணாமலை - 459
கடலூர் - 456
காஞ்சிபுரம் - 440
திருநெல்வேலி - 379
அரியலூர் - 372
விழுப்புரம் - 371
தூத்துக்குடி - 306

Tags :
|