Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 470 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 470 பேருக்கு கொரோனா

By: vaithegi Mon, 05 Sept 2022 10:48:39 AM

தமிழகத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 470 பேருக்கு கொரோனா

சென்னை: 470 பேருக்கு கொரோனா... கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அதாவது, தினசரி கொரோனா பாதிப்பு கூடுவதும், குறைவதுமாக இருந்து வந்த நிலையில் தற்போது தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 470 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,70,567 ஆக உயர்ந்துள்ளது.

corona,chennai ,கொரோனா,சென்னை

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 84, செங்கல்பட்டு 28, கோவை 64, ஈரோடு 34, கிருஷ்ணகிரி 19, சேலத்தில் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 38,036 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் 35,27,521 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 5,010 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

இதை அடுத்து இந்த நிலையில் கொரோனா முதன்முதலாக பரவத் தொடங்கிய நாடான சீனாவில் மீண்டும் கொரோனா அலை வீச தொடங்கியுள்ளதால், உலக சுகாதார நிறுவனம் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags :
|