Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா ஒற்றை இலக்க எண்ணில் பதிவு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா ஒற்றை இலக்க எண்ணில் பதிவு

By: vaithegi Wed, 14 Dec 2022 9:13:54 PM

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா ஒற்றை இலக்க எண்ணில் பதிவு

சென்னை :சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

இதனை அடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் பல்வேறு வகையில் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி கொண்டு வருகிறது.

corona,vaccine ,கொரோனா ,தடுப்பூசி

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த பல மாதங்களாகவே கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இன்று 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து அதன் விவரம் வருமாறு:- தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆண், 4 பெண்கள் உள்பட மொத்தம் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, திண்டுக்கல் உள்பட மொத்தம் 7 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 31 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. கொரோனா தோற்றால் இன்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை

Tags :
|