Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று முதல் செப். 2-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் இன்று முதல் செப். 2-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்

By: vaithegi Mon, 28 Aug 2023 11:33:57 AM

தமிழகத்தில் இன்று முதல் செப். 2-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் நாளை முதல் வரும் செப். 2-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

director,chennai meteorological centre,rainfall,puducherry,tamil nadu ,சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்,மழை , தமிழ்நாடு, புதுச்சேரி

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஆக. 27-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் 9 செ.மீ.,வேலூர் மாவட்டம் பொன்னை அணையில் 7 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில், 6 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.


Tags :