தமிழகத்தில் பருவநிலை மாற்றம் தொடக்கம் .. தொற்று நோய்களும் பரவும் அபாயம்
By: vaithegi Tue, 05 Sept 2023 3:13:00 PM
சென்னை: பொதுமக்கள் அனைவரும் தகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு மருத்துவர்கள் எச்சரிக்கை ... தமிழகத்தில் தற்போது பருவநிலை மாற்றம் தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பருவமழை இனி வரும் மாதங்களில் அதிக அளவில் மழை பெய்து வரும்.
இதை அடுத்து இந்த மழை காரணமாக அதிக அளவு தொற்று நோய்கள் பரவும். தற்போது டெங்கு, பன்றிக் காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற பல்வேறு நோய்கள் தமிழகத்தில் வேகமாக பரவி வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் மக்கள் அதிக கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சானிடைசர்களைக் கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
மேலும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு சுகாதாரமாக இருந்து நோய்களை தவிர்த்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.