தமிழகத்தில் இனி வெயிலை பத்தி கவலை இல்ல.. மழை தான்
By: vaithegi Fri, 26 May 2023 2:35:13 PM
சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கடலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் ... தமிழகத்தில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும்
இதனை அடுத்து திருப்பூர் திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், அரியலூர், கடலூர், பெரம்பலூர் காரைக்கால் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து நாளை திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருப்பூர், தேனி, தர்மபுரி, ஈரோடு கோயம்புத்தூர், திருவண்ணாமலை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற மே 28, 29, 30 ஆகிய தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யும் சென்னை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
கேரள கடலோர பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதி, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மன்னர் வளைகுடா பகுதி, இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதி ஆகிய இடங்களில் சூறாவளி காற்று 55 கி.மீ வேகத்தில் வீசும். அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.