தமிழகத்தில் இன்று கொரோனாவால் 5960 பேர் பாதிப்பு
By: Nagaraj Sun, 16 Aug 2020 7:30:23 PM
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,950 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,38,055 ஆக உயர்ந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 125 பேர் தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 22 பேரும், கோவையில் 14 பேரும் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே உள்ளது. தொற்று எண்ணிக்கை 5500ஐ கடந்த நிலையிலேயே இருக்கிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் தினசரி 100ஐ கடந்து வருகிறது.
பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தாலும், உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,950 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,38,055 ஆக
உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,019 பேர் டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 2,78,270 பேர்
மீண்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில 125 பேர் மரணம்
அடைந்தனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,766 ஆக
உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1196 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 116,650 ஆக உயர்ந்துள்ளது.