தாய்லாந்தில் சூறைக்காற்றால் பள்ளிக்கூட தகரக்கூரை பெயர்ந்து விபத்து
By: Nagaraj Tue, 23 May 2023 11:08:14 PM
தாய்லாந்து: பயங்கர சூறைக்காற்று... தாய்லாந்தில் வீசிய சூறைக்காற்றால், பள்ளிக்கூடத்தில் தகரக்கூரை பெயர்ந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
தாய்லாந்தில் நேற்று முதல் பருவமழை தொடங்கியதால் பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
பிஜிட் மாகாணத்தில் மழைக்கு அஞ்சி பள்ளி வளாகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர் மற்றும் பள்ளி ஊழியர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
அப்போது வீசிய சூறைக்காற்றைத் தொடர்ந்து அங்கு போடப்பட்டிருந்த தகரக்கூரை பெயர்ந்து விழுந்ததால் ஏராளமானோர் அடியில் சிக்கிக்கொண்டனர். விடிய விடிய நடைபெற்ற மீட்பு பணிகளில் 4 குழந்தைகள் உள்பட 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
Tags :
rescue |
cyclone |
corpses |
rescued |