Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

By: Nagaraj Sat, 04 Feb 2023 6:50:04 PM

மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

மதுரை: தமிழகத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு... மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.6,080 கோடியும், கேரளாவுக்கு ரூ.2,033 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தெற்கு ரயில்வேயில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும் என மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் ஆனந்த் தெரிவித்தார்.

மேலாளர் பத்மநாபன் ஆனந்த் மதுரையில் உள்ள கோட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”தற்போதைய ஒதுக்கீட்டின் மூலம் மின்மயமாக்கல், இரட்டை ரயில் பாதைகள், ரயில் நிலைய கட்டமைப்பு வசதிகள், ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில் பாதை பணிகள் மற்றும் பயணிகள் வசதிகள் மேற்கொள்ளப்படும். தேவைப்பட்டால், ரயில்வே துறையிடம் கூடுதல் நிதி கோரப்படும்.

வந்தே பாரத் ரயிலைப் போல வந்தே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறினார். வந்தே பாரத் 800 கி.மீ. வரை வெகுதூரம் செல்லலாம். இரு நகரங்களுக்கிடையே விரைவு பயணம் மேற்கொள்வதற்காக 100 கி.மீ. தூரம் செல்லக்கூடிய வகையில் வந்தே மெட்ரோ ரயில் சேவை குறித்தும் பட்ஜெட்டில் அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.

budget,divisional manager,madurai,railway,tamil nadu, ,கோட்ட மேலாளர், தமிழ்நாடு, பட்ஜெட், மதுரை, ரயில்வே

எரிபொருள் தேவையைக் குறைக்கும் வகையிலும், சுற்றுச்சூழலைக் கணக்கில் கொண்டும் ஹைட்ரஜன் பயன்பாட்டை அதிகரிக்கும் திட்டம் குறித்தும் அறிவித்துள்ளார்.

தெற்கு ரயில்வேக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 8,000 கோடி ரூபாய்க்கான நிதியாண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. தேவைப்பட்டால் மேலும் கேட்கலாம். ஒவ்வொரு வகையிலும் குறிப்பிட்ட மாத இடைவெளியில் தேவைக்கேற்ப ஒதுக்கீடு அதிகரிக்கப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு தெற்கு ரயில்வேக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கூறினார்.


இந்த பேட்டியின் போது முதுநிலை மண்டல பொறியாளர் நாராயணன், முதுநிலை மண்டல வணிக மேலாளர் ரதிபிரியா, மண்டல முதுநிலை ரயில் இயக்க மேலாளர் ராஜேஷ் சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் கோபிநாத் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :
|