Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 10,729 பேருக்கு கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 10,729 பேருக்கு கொரோனா

By: vaithegi Fri, 11 Nov 2022 2:29:55 PM

கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 10,729 பேருக்கு கொரோனா

சீனா: 10,729 பேருக்கு கொரோனா .... சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதையடுத்து அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 10,729 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா 4ஆம் அலை ஏற்பட்டுள்ளதா என்ற அச்சம் நிலவுகிறது. பீஜிங்கின் 21 மில்லியன்(2.10 கோடி) மக்கள் தினசரி கொரோனா சோதனைக்கு உட்பட்டுள்ளனர்.

corona,china ,கொரோனா,சீனா

இதில் கடந்த 24 மணி நேரத்தில் 118 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சீனாவின் தலைநகர் பீஜிங் நகர பூங்காக்களை மூடியுள்ளது மற்றும் பிற கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மேலும் சீனாவின் குவாங்சோ மற்றும் சோங்கிங் நகரங்களில் ஊரடங்கு காரணமாக 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடுகளில் முடங்கும் நிலையில் இருந்தனர். பல நகரப் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறியுள்ளன.

Tags :
|