Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவின் உள்ளூர் நகரங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 1,624 பேர் கொரோனா

சீனாவின் உள்ளூர் நகரங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 1,624 பேர் கொரோனா

By: vaithegi Fri, 14 Oct 2022 11:43:24 AM

சீனாவின் உள்ளூர் நகரங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 1,624 பேர் கொரோனா

பெய்ஜிங்: கடந்த 24 மணி நேரத்தில் 1,624 பேர் கொரோனா .... உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் வுஹானில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து, கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் உலக நாடுகள் கொரோனா பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வருகின்றன. கடந்த சில நாட்களாகவே சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

corona,china ,கொரோனா , சீனா

இதனை அடுத்து நேற்றுமுன்தினம் 1,890 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சீனாவின் உள்ளூர் நகரங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 1,624 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், 1,252 பேருக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிய உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக அதிகரித்துள்ளது. மேலும், சீனாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 2,54,855 ஆக உயர்ந்துள்ளது.

Tags :
|