Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 169 பேருக்கு கொரோனாவால் பாதிப்பு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 169 பேருக்கு கொரோனாவால் பாதிப்பு

By: vaithegi Thu, 02 Mar 2023 11:14:42 AM

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 169 பேருக்கு கொரோனாவால் பாதிப்பு

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.01 கோடியாக உயர்வு.

இந்தநிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 169 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

corona,union ministry of health ,கொரோனா,மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

இதையடுத்து நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2439 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,772 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,53,668ஆக பதிவாகியுள்ளது.

மேலும் நாடு முழுவதும் இதுவரை 220,64,01,760 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 7,528 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags :
|