Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரத்து 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரத்து 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: vaithegi Wed, 03 Aug 2022 10:55:41 AM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரத்து 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுடெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அந்தவகையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17 ஆயிரத்து 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன் தின பாதிப்பான 16 ஆயிரத்து 464 மற்றும் நேற்றைய பாதிப்பான 13 ஆயிரத்து 734-ஐ விட அதிகமாகும்.

எனவே இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 144 ஆகஉயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 3 ஆயிரத்து 610 ஆக ஆகஉயர்ந்துள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

இதனை அடுத்து நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 57 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 477 ஆக ஆகஉயர்ந்துள்ளது.

மேலும் அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 204 கோடியே 84 லட்சத்து 30 ஆயிரத்து 732 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|