Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 673 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 673 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: vaithegi Sun, 31 July 2022 12:11:45 PM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 673 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுடெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19 ஆயிரத்து 673 பேருக்கு கொரோனா பாதிப்பு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது நேற்று முன் தின பாதிப்பான 20 ஆயிரத்து 409 மற்றும் நேற்றைய பாதிப்பான 20 ஆயிரத்து 408-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 19 ஆயிரத்து 811 ஆக உயர்ந்துள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

இதை அடுத்து இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 49 ஆயிரத்து 778 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 357 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 204 கோடியே 25 லட்சத்து 69 ஆயிரத்து 509 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :
|