Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 468 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 468 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

By: vaithegi Wed, 05 Oct 2022 11:17:25 AM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 468 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 468 பேருக்கு கொரோனா .... இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. எனவே அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 468 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இது நேற்றைய பாதிப்பான 1 ஆயிரத்து 968-ஐ விட அதிகமாகும். இதனால், நாட்டில் இதுவரை மட்டும் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 1 ஆயிரத்து 934 ஆக உயர்ந்துள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 40 லட்சத்து 39 ஆயிரத்து 883 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 33 ஆயிரத்து 318 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 733 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை மட்டும் 218.83 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :
|