Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 551 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 551 பேருக்கு கொரோனா உறுதி

By: vaithegi Fri, 05 Aug 2022 10:50:17 AM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 551 பேருக்கு கொரோனா உறுதி

புதுடெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அந்த வகையில் , இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை அடுத்து இது நேற்று முன் தின பாதிப்பான 17 ஆயிரத்து 135 மற்றும் நேற்றைய பாதிப்பான 19 ஆயிரத்து 893-ஐ விட அதிகமாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 7 ஆயிரத்து 588 ஆக உயர்ந்துள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

மேலும் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 45 ஆயிரத்து 624 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 364 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 600 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை மட்டும் 205 கோடியே 59 லட்சத்து 47 ஆயிரத்து 243 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|