கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் 2,097 பேருக்கு கொரோனா உறுதி
By: vaithegi Mon, 19 Dec 2022 08:59:46 AM
சீனா: புதியதாக 2,097 பேருக்கு கொரோனா ... உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது.
எனவே கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது.
இதனை அடுத்து நேற்று முன்தினம் அங்கு 2,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் 2,097 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை மட்டும் சீனாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,235 ஆக உள்ளது. சீனாவில் இதுவரை மட்டும் உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 3,78,458 ஆக அதிகரித்துள்ளது