Advertisement

கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் கொரோனாவால் 24 பேர் பலி

By: Nagaraj Thu, 02 July 2020 11:32:56 AM

கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் கொரோனாவால் 24 பேர் பலி

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பாதிப்பு தமிழகத்திலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்த கொரோனாவுக்கு சென்னையில் ஒரே நாளில் 24 பேர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,882 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 94, 049 ஆக அதிகரித்துள்ளது.

madras,korana,overnight,kills 24,people shock ,சென்னை, கொரானா, ஒரே நாள், பலி 24, மக்கள் அதிர்ச்சி

நேற்று மட்டும் 63 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 26 பேர் தனியார் மருத்துவமனையிலும், 63 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,264 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 60,533 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 24 பேர் பலியாகியுள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனை- 6, ஓமந்தூரார் - 5, ஸ்டான்லி -7, கேஎம்சி - 3 தனியார் மருத்துவமனை- 3 என உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|
|