Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாய் 2,529 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாய் 2,529 பேருக்கு கொரோனா உறுதி

By: vaithegi Thu, 06 Oct 2022 10:33:58 AM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாய் 2,529 பேருக்கு கொரோனா உறுதி

புதுடெல்லி: புதிதாய் 2,529 பேருக்கு கொரோனா உறுதி ... இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்து 500-க்கு மேல் பதிவாகி உள்ளது. இதையடுத்து இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 529 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

எனவே இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,46,04,463 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,28,745 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,553 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

corona,india ,கொரோனா ,இந்தியா

இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,40,43,436 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 32,282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை மட்டும் 2,18,84,20,182 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 79,366 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கு இடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் மட்டும் 1,22,057 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மட்டும் மொத்தம் 89.62 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|