Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: vaithegi Sat, 09 July 2022 11:49:55 AM

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகம்: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று ஆண்கள் 1,495, பெண்கள் 1,227 என மொத்தம் 2,722 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 96,321 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து ,39,606 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 2,413 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை.

corona,loss of life ,கொரோனா ,உயிரிழப்பு

மேலும் தற்போது மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 18,687 ஆக உள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்று பாதிப்பு 2,765 ஆகவும், சென்னையில் 1011 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மட்டும் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,028 ஆக உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 939 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு 474, திருவள்ளூரில் 191 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 18,687 பேர் தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :
|