கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 2,804 பேருக்கு கொரோனா உறுதி
By: vaithegi Sat, 20 Aug 2022 05:17:37 AM
சீனா: சீனாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இருப்பினும் தொற்று எண்ணிக்கை குறைவாக பதிவாகி வந்த நிலையில், கடந்த சில தினங்களாகவே பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது.
இதை அடுத்து நேற்றைய தினம் அந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 2,804 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இதில் 2,201 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
மேலும் சீனாவில் இதுவரை மட்டும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது. சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,38,183 ஆக உயர்ந்துள்ளது.