Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: vaithegi Tue, 13 Sept 2022 10:42:51 AM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியா: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 ஆயிரத்து 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை அடுத்து இது நேற்றைய பாதிப்பான 5 ஆயிரத்து 221-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 4 ஆயிரத்து 949 ஆக உயர்ந்துள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் 4 கோடியே 39 லட்சத்து 30 ஆயிரத்து 417 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 347 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

மேலும் கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 185 ஆக அதிகரித்துள்ளது.

இதைனையடுத்து அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 215 கோடியே 47 லட்சத்து 80 ஆயிரத்து 693 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :
|