Advertisement

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 406 பேருக்கு கொரோனா

By: vaithegi Mon, 21 Nov 2022 2:40:20 PM

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 406 பேருக்கு கொரோனா

இந்தியா : சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

இதனை அடுத்து இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 406 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 69 ஆயிரத்து 421 ஆக உயர்ந்துள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 481 ஆக உள்ளது. அதேபோல், கொரோனாவில் இருந்து இதுவரை மட்டும் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 32 ஆயிரத்து 433 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 402 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் 12 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மட்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,30,586 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை மட்டும் 219.86 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதர அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Tags :
|