Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 482 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 482 பேருக்கு கொரோனா உறுதி

By: vaithegi Fri, 02 Sept 2022 10:22:20 PM

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 482 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை; தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 288 ஆண்கள், 194 பெண்கள் என மொத்தம் 482 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இதில் அதிகபட்சமாக சென்னையில் 75 பேர், கோவையில் 57 பேர், சேலத்தில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பாதிப்பு இல்லை, அவற்றை தவிற அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.

corona,chennai ,கொரோனா ,சென்னை

மேலும், 12 வயதுக்குட்பட்ட 47 குழந்தைகளுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்ட 71 முதியவர்களுக்கும் இன்று கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் 352 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைதொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 5 ஆயிரத்து 56 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் இதில் அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 161 பேரும், கோவையில் 475 பேரும், சேலத்தில் 252 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர் என அதில் கூறப்பட்டுள்ளது

Tags :
|