Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: vaithegi Fri, 07 Apr 2023 12:28:27 PM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியா: தமிழக அரசு இதற்கு முன்னதாக கொரோனா அலை பரவலின் போது மேற்கொள்ளப்பட்ட தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக தான் நோய்த்தொற்று பாதிப்பானது அதிவிரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை மிகவும் அதிக அளவில் பதிவாகி கொண்டு வருகிறது. இதையடுத்து இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா


இதேபோன்று தமிழகத்தில் மார்ச் மாத முதல் வார நிலவரத்தின் படி தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20 ஆக பதிவாகியது. ஆனால் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100 -ஐ தாண்டி உள்ளது. மேலும், இதுவரை மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் 6% கொரோனா பாதிப்பு விகிதம் உள்ளது.

எனவே தொடர்ந்து பாதிப்பு விகிதம் வேகமாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் அரசின் அறிவுறுத்தலின் படி தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று , கொரோனா தொற்று உறுதியாகும் விகிதம் அதிகரிக்கும் பட்சத்தில் ஊரடங்கு அறிவிப்புகள் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என தெரிகிறது.

Tags :
|