இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,664 பேருக்கு கொரோனா
By: vaithegi Sun, 18 Sept 2022 10:36:01 AM
இந்தியா: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 5 ஆயிரத்து 664 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று 5 ஆயிரத்து 747 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 5 ஆயிரத்து 664 ஆக குறைந்துள்ளது.
இதனை அடுத்து இதுவரை மட்டும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,45,28,524 லிருந்து 4,45,34,188 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 4,555 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
எனவே இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,39,53,374 லிருந்து 4,39,57,929 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 35 பேர் பலியாகினர். இதுவரை மட்டும் 5,28,337 பேர் உயிரிழந்தனர்.
மேலும் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 46,848 லிருந்து 47,922 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 216 கோடியே 56 லட்சம் 'டோஸ்' கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒரே நாளில் மட்டும் 14,84,216 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.