Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 6 ஆயிரத்து ,168 பேருக்கு கொரோனா உறுதி

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 6 ஆயிரத்து ,168 பேருக்கு கொரோனா உறுதி

By: vaithegi Fri, 02 Sept 2022 10:09:34 AM

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 6 ஆயிரத்து ,168 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியா: இந்தியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் மாறி கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 6 ஆயிரத்து ,168 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று 7 ஆயிரத்து 946 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 6 ஆயிரத்து 168 ஆக குறைந்துள்ளது.

இதனை அடுத்து இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,44,36,339 லிருந்து 4,44,42,507 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 9,685 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

corona,india ,கொரோனா ,இந்தியா

எனவே இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,38,45,680 லிருந்து 4,38,55,365 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 21 பேர் பலியாகினர். இதுவரை 5,27,932 பேர் உயிரிழந்தனர்.

மேலும் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 62,748 லிருந்து 59,210 ஆக குறைந்துள்ளது. இதுவரை மட்டும் நாடு முழுவதும் 212 கோடியே 72 லட்சம் 'டோஸ்' கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒரே நாளில் 22,40,162 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :
|