Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா உறுதி

By: vaithegi Wed, 31 Aug 2022 11:15:50 AM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியா: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. எனவே அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை அடுத்து இது நேற்றைய பாதிப்பான 5 ஆயிரத்து 439-ஐ விட அதிகமாகும்.எனவே இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 28 ஆயிரத்து 393 ஆக உயர்ந்துள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 35 ஆயிரத்து 852 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 64 ஆயிரத்து 667 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 874 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை மட்டும் 212 கோடியே 39 லட்சத்து 92 ஆயிரத்து 816 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|