Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 842 பேர் கொரோனாவால் பாதிப்பு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 842 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: vaithegi Fri, 11 Nov 2022 12:22:58 PM

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 842 பேர் கொரோனாவால்  பாதிப்பு

இந்தியா: புதியதாக 842 பேர் கொரோனா ... சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

எனவே கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் பல்வேறு வகையில் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி கொண்டு வருகிறது. இதையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

corona,india ,கொரோனா,இந்தியா

அதன்படி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 842 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,64,810பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக தொற்றால் 6 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5,30,520 ஆக உள்ளது.

மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மட்டும் 4,41,21,538பேர் குணமடைந்து வீடு திரும்பியனர். தற்போது 12,752 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று மட்டும் 1,38,075 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|